இத்திட்டத்தின் மூலம் சுமார் 432.80 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றது. வருகின்ற வடகிழக்கு பருவமழை காலத்திற்குள் மேற்கூறிய பணிகள் யாவும் முன்னேற்றற நிலையில் இருப்பதால் புலிக்கரை திட்டத்தின் மூலம் 14 ஏரிகளும், தடுப்பணைகள், அணைக்கட்டுகள் ஆகியன நீர்தேக்கி வைக்க எளிதாக இயலும். பாலக்கோடு வட்டம், திருமல்வாடியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் கெசர்குளிஅல்லா ஆற்றின் குறுக்கே தடுப்பணை முழுவதுமாக நல்ல முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பணையின் மூலம் 40.60 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றது. மேலும் இத்தடுப்பணையை சுற்றி உள்ள 60 ஆழ்துளை கிணறுகளுக்கும் நீரூற்று கிடைக்கப்பெறுகின்றது.
மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், கேசர்குளிஅல்லா அணை புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் 80 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. பணிகளை விரைந்து முடித்திட உரிய நடவடிக்கைகள் மே ற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் பாபு உட்பட தொடர்புடைய அலுவலர்கள், செய்தியாளர்கள் உடனிருந்தனர்.