No results found

    நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு விழா


    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் மோகன்ராசு தலைமை வகித்தார். அறக்கட்டளை செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சாமிக்கண்ணு, மொரப்பூர் கொங்கு கல்லூரி தாளாளர் பொன் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி தாளாளர் சந்திரசேகர் வரவேற்று பேசினார். இப்பள்ளியில் பயின்று நீட் தேர்வில் 720 க்கு 628 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மொரப்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கலைமணிக்கு அறக்கட்டளை தலைவர் மோகன்ராசு பரிசு வழங்கி பாராட்டினார். கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளி தாளாளர் சந்திரசேகர் மாணவிக்கு இனிப்புகள் வழங்கினார். இவ்விழாவில் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாக இயக்குனர்கள் வெற்றிச்செல்வன், கணேசன், நாகராஜ், பரமசிவம், தமிழரசு, ராமு, குணசீலன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி பாராட்டினார்கள்.

    Previous Next

    نموذج الاتصال