No results found

    வனத்துறையினருக்கு பயிற்சி முகாம்


    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் வனத்துறை அலுவலகத்தில், கிழக்கு தொடர்ச்சி மலை சூழல் மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் புது திட்டங்கள் குறித்து வனத்துறையினருக்கு திருநெல்வேலி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் மாவட்ட வன அலுவலர் அன்பு தலை மையில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 155 பழங்குடி கிராமங்கள் தேர்ந்தெடுத்து 8 மலை தொடர்களில் சந்தனமரம் மீண்டும் உருவாக்குவது, பழங்குடி மக்கள் வேளாண்மையை எவ்வாறு புனரமைக்க வேண்டும் என்பது குறித்து முகாமில் விவாதிக்கபட்டது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி மற்றும் அரூர் உதவி வன பாதுகாவலர்கள் வின்சென்ட் சரவணன் ஒகேனக்கல் வனத்துறை அலுவலர் ராஜ்குமார் தருமபுரி மண்டலத்தைச் சார்ந்த வனசரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்களபணியாளர்கள் உள்ளிட்ட வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال